புதுச்சேரி: புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், 'கேரளாவில் நடைபெற்ற தென்மண்டல மாநில மாநாட்டில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி ஏன் கலந்துகொள்ளவில்லை. ஆளுநர், புதுச்சேரி வளர்ச்சிக்கு எந்த ஒரு நிதியையும் கேட்கமாட்டார்.
அவர் மத்திய அரசுக்கு சாதகமாகத் தான் இருப்பார். ரங்கசாமி மாநில மக்களின் உரிமையை விட்டுக்கொடுத்து உள்ளார். எனவே, புதுச்சேரி மக்களிடம் முதலமைச்சர் ரங்கசாமி பொது மன்னிப்புக்கேட்க வேண்டும். காரைக்கால் மாணவன் விஷம் கொடுத்து உயிர் இழந்தது வருத்தத்தைத் தருகிறது. மருத்துவர் அவருக்கு என்ன நோய் என்று கண்டுபிடிக்கவில்லை.