தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 6, 2020, 5:55 PM IST

ETV Bharat / bharat

”வேல் யாத்திரையின் நோக்கமே மதக்கலவரத்தை உருவாக்குவதுதான்” - முதலமைச்சர் தாக்கு

புதுச்சேரி : ”தமிழ்நாட்டில் நடைபெறும் வேல் யாத்திரையின் நோக்கமே மதக்கலவரத்தை உருவாக்குவதுதான்” என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கருத்துத் தெரிவித்துள்ளார்.

டெங்கு விழிப்புணர்வு பேரணியை தொடங்கிவைத்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
டெங்கு விழிப்புணர்வு பேரணியை தொடங்கிவைத்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

புதுச்சேரி சுகாதாரத்துறை சார்பில் டெங்கு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பேரணி இன்று (நவ.06) நடைபெற்றது. மணிமேகலை அரசு பள்ளியில் இருந்து தொடங்கிய இந்த விழிப்புணர்வுப் பேரணியில் முதலமைச்சர் நாராயணசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் கலந்துகொண்டு கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர்.

இந்தப் பேரணியில் ஏராளமான மாணவிகள் கைகளில் பதாகைகளை ஏந்தியும், துண்டுப் பிரசுரங்களை வழங்கியும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, டெங்குவைக் கட்டுப்படுத்தவும், பருவ மழையை எதிர்கொள்ளவும் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருவதாகத் தெரிவித்தார்.

மேலும் வேல் யாத்திரை குறித்து கருத்துத் தெரிவித்த அவர், ”புதுச்சேரி மாநிலம் அமைதியான மாநிலம். அனைத்து மதங்களுக்கும் முன்னுரிமை அளிக்கும் மாநிலம். மதக் கோட்பாடுகளை கடைபிடிப்பது இங்கு யாருக்கும் பிரச்சினை கிடையாது. ஆனால் அது மதக்கலவரமாக மாறிவிடக்கூடாது” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர் ”தமிழ்நாட்டில் நடைபெறும் வேல் யாத்திரையின் நோக்கமே மதக்கலவரத்தை உருவாக்குவதுதான். புதுச்சேரியில் எந்தவிதமான மதக் கலவரத்திற்கும் நாங்கள் இடம்கொடுக்க மாட்டோம்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details