தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

’நீட் தேர்வு ரத்தா, நடைபெறுகிறதா என ஸ்டாலின் விளக்கமளிக்க வேண்டும்’ - புதுச்சேரி அதிமுக - அண்மை செய்திகள்

புதுச்சேரி: தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இந்த ஆண்டு நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா அல்லது தேர்வு நடைபெறுமா என்பது குறித்து திமுக விளக்கமளிக்க வேண்டுமென அதிமுக தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

புதுச்சேரி அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அ அன்பழகன் செய்தியாளர் சந்திப்பு
புதுச்சேரி அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அ அன்பழகன் செய்தியாளர் சந்திப்பு

By

Published : Jun 29, 2021, 12:26 PM IST

புதுச்சேரி அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அ. அன்பழகன் செய்தியாளர்களை இன்று (ஜூன்.29) சந்தித்தார். அப்போது பேசிய அவர், “திமுக எப்போது தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தாலும் வாக்களித்த மக்களுக்கு நன்மை செய்வதை விட்டு, வரலாற்று சிறப்புமிக்க, தொன்மை வாய்ந்த சரித்திரம் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளுக்கும், இந்திய அரசியலமைப்பிற்கும் எதிராக செயல்பட முயற்சிப்பதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளது.

கேலிக்கு உள்ளாக்கப்படும் அரசியலமைப்பு சட்டம்

’மத்திய அரசு’ என்றுள்ளதை ’ஒன்றிய அரசு’ என அழைத்து அரசியலமைப்பு சட்டத்தையே கேலி செய்யும் விதமாக செயல்பட்டு வருகிறது. மத்திய அரசை சிறுமைப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு இந்திய ஒருமைப்பாட்டை திமுக சீர்குலைக்கிறது.

வாசகத்தை திரிக்கும் திமுக

புதுச்சேரியில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பில் துணை நிலை ஆளுநரால் வாசிக்கப்பட்ட உறுதிமொழியை தவறாக சித்தரித்து தனது தவறுக்கு வலுசேர்க்க திமுக முயற்சிக்கிறது. ”இந்திய ஒன்றிய ஆட்சிப் பரப்புக்கு உள்பட்ட புதுச்சேரியின் அமைச்சராக பதவியேற்றுள்ள” என்ற வாசகத்தை தனக்கு வசதியாகத் திரித்து, தனது தவறை நியாயப்படுத்த திமுக முயற்சிப்பது கண்டிக்கத்தக்க ஒன்றாகும்.

ஒன்றிய ஆட்சி எனக் குறிப்பிடுவது தவறு’

இந்திய ஒன்றியத்திற்கு உள்பட்ட ஆட்சிப்பரப்பில் கிராம ஆட்சி, உள்ளாட்சி, மாநில ஆட்சி, மத்திய ஆட்சி என வரையறுக்கப்பட்டுள்ளன. அதைக்கூட புரிந்து கொள்ளாமல் மத்திய ஆட்சியை ஒன்றிய ஆட்சி எனக் குறிப்பிடுவது தவறு என்பதை திமுக புரிந்து கொள்ளவேண்டும்.

ஆட்சிப் பரப்பிற்கும் அரசின் பெயருக்கும்கூட வித்தியாசம் தெரியாமல் திமுக உலறிக்கொண்டுள்ளது. திமுகவின் இந்தத் தவறான கருத்தை மத்திய அரசு உரிய விதத்தில் தடுத்து நிறுத்த வேண்டும்.

நீட் குறித்து விளக்கம் தேவை

நீட் இந்த ஆண்டு தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் நடைபெற உள்ளதா என்பது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் விளக்கமளிக்க வேண்டும், இல்லை என்றால் தனது பதவியை ராஜினாமா செய்து கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:தமிழ்நாடு சிறுபான்மையின ஆணையத்தலைவராக பீட்டர் அல்போன்ஸ் நியமனம்

ABOUT THE AUTHOR

...view details