தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 2, 2020, 3:19 PM IST

ETV Bharat / bharat

புதுச்சேரி ஏம்பலத்தில் இஎஸ்ஐ மருத்துவமனையை தொடங்கிவைத்த முதலமைச்சர் நாராயணசாமி

புதுச்சேரியில் கிராமப்புறங்களில் மருத்துவச் சேவையை அதிகரிக்கும் வகையில் ஏம்பலம் பகுதியில் இஎஸ்ஐ மருத்துவமனையை முதலமைச்சர் நாராயணசாமி திறந்துவைத்தார்.

pudhucherry cm narayanasamy  embalam esi hospital inaugurated
புதுச்சேரி ஏம்பலத்தில் இஎஸ்ஐ மருத்துவமனையை தொடங்கிவைத்த முதலைச்சர் நாராயணசாமி

புதுச்சேரி: புதுச்சேரியில் கிராமப்புறங்களில் மருத்துவச் சேவையை அதிகரிக்கும் வகையில் ஏம்பலம் பகுதியில் இஎஸ்ஐ மருத்துவமனையை முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கிவைத்தார். வடகிழக்குப் பருவமழையானது தற்போது தொடங்கியுள்ளதால், நகர, கிராமப் பகுதிகளில் நோய்த்தொற்று அதிகரிக்கும் எனச் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதைக் கருத்தில்கொண்ட புதுச்சேரி அரசு கிராமப்புறங்களில் மருத்துவச் சேவையை அதிகரித்துவருகிறது. இதன் ஒரு பகுதியாக ஏம்பலம் பகுதியில் இஎஸ்ஐ மருத்துவமனை ஒன்று அமைக்கப்பட்டது. இதனை முதலமைச்சர் நாராயணசாமி, சுகாதாரத் துறை அமைச்சர் மற்றும் சமூக நலத் துறை அமைச்சர் கந்தசாமி, மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் முன்னிலையில் ரிப்பன் வெட்டியும், குத்துவிளக்கு ஏற்றியும் மக்களின் பயன்பாட்டுக்குத் திறந்துவைத்தனர்.

புதுச்சேரி ஏம்பலத்தில் இஎஸ்ஐ மருத்துவமனையைத் தொடங்கிவைத்த முதலமைச்சர் நாராயணசாமி

தொடர்ந்து அங்கு நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று புதுச்சேரி அரசின் மருத்துவச் சேவைகள் குறித்து முதலமைச்சர் நாரயணசாமி பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தினார்.

இதையும் படிங்க:அரசு மருத்துவமனையில் தரமான சிகிச்சை... ஆய்வுக்கு சென்ற அமைச்சருக்கு நன்றி கூறிய கரோனா நோயாளிகள்

ABOUT THE AUTHOR

...view details