தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வீரப்பனிடம் குண்டு அடிபட்ட காவலர் கர்நாடகாவில் மரணம்!

வீரப்பனிடம் துப்பாக்கி குண்டால் அடிபட்ட காவலர் சித்தராஜநாயகா மாரடைப்பால் காலமானார்.

By

Published : May 25, 2021, 7:53 PM IST

Updated : May 25, 2021, 8:02 PM IST

Siddarajanaika
Siddarajanaika

கர்நாடக மாநிலம், சாம்ராஜ் நகர் பகுதியைச் சேர்ந்த காவலர், சித்தராஜநாயகா(59) இன்று(மே 25) உயிரிழந்துள்ளார். இவர் சந்தனக் கடத்தல் வீரப்பனிடம் நேரடியாக மோதியவர்.

1993ஆம் ஆண்டு ராம்பூர் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றியபோது வீரப்பன் இந்த காவல் நிலையத்தில் தாக்குதல் நடத்தியுள்ளார். அப்போது, வீரப்பன் துப்பாக்கியால் சுட்டதில் 4 குண்டுகள் சித்தராஜநாயகா மீது பாய்ந்துள்ளது.

இந்த மோசமான தாக்குதலில் உயிர்ப்பிழைத்து பின்னர் ஆய்வாளராகப் பதவி உயர்வு பெற்றநிலையில், தனது பணி ஓய்வுக்கு ஐந்து நாள்களுக்கு முன்னர் தற்போது மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

இவரது இறுதிச்சடங்கு சொந்த ஊரான கொல்லேகல்லில் நடைபெறுகிறது.

இதையும் படிங்க:கரோனாவுக்கு ட்ரம்ப் சாப்பிட்ட மருந்து, இந்தியாவிலும் விற்பனை: ஒரு டோஸ் விலை தெரியுமா?

Last Updated : May 25, 2021, 8:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details