புதுச்சேரியில் பணிபுரியும் தமிழ் பேசும் அலுவலர்களை மாற்றி அந்த பதவியில் வடநாட்டு அலுவலர்களை துணைநிலை ஆளுநர் நியமித்து வருவதாக பல்வேறு அமைப்புகள் குற்றச்சாட்டுகள் எழுப்பி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், புதுச்சேரி உரிமை பாதுகாப்பு கூட்டு இயக்கம் சார்பில் தமிழ் மொழி பேசும் அலுவலர்களை நியமிக்க வேண்டும் எனக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்து. புதுச்சேரி தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற இப்போராட்டத்தில் அக்கூட்டமைப்பு தலைவர் சுவாமி நாதன் தலைமையேற்றார். இதில், துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.