புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்குத் தனியார் தொலைக்காட்சி சார்பாக ஒளிப்பதிவாளர் பரத் (33) என்பவர் பணிபுரிந்துவந்தார். அண்மையில் அவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு பெற்று வந்தார். இதனிடையே, சிகிச்சைப் பலனளிக்காமல் இன்று(ஏப்.22) இறந்தார். இறந்த பரத்தின் குடும்பத்தினருக்கு புதுச்சேரியின் செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர் மற்றும் புகைப்பட கலைஞர்கள் தங்களது இரங்கலை தெரிவித்தனர்.
ஒளிப்பதிவாளர் இறப்பு குறித்து அறிந்து அம்மாநில அரசியல் கட்சியினர் உள்பட பல்வேறு இயக்க நிர்வாகிகளும் தங்களின் இரங்கலை தெரிவித்துவருகின்றனர்.