பிரதமர் மோடியின் முதன்மை ஆலோசகர் பி.கே. சின்ஹா, தனிப்பட்ட காரணங்களுக்காகத் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். முன்னாள் அமைச்சரவைச் செயலாளரான சின்ஹா, கடந்த 18 மாதங்களாக பிரதமர் அலுவலகத்தில் முதன்மை ஆலோசகராகப் பொறுப்பு வகித்துவருகிறார்.
மோடிக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் சின்ஹா, திடீரென பதவி விலகியுள்ளது பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. அமைச்சரவைச் செயலாளராக இருந்தபோது அவருக்கு மூன்று முறை பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது.