டெல்லி: இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், தேர் ஊர்வலத்தில் குழந்தைகள் உட்பட பலர் இறந்த சோகத்தை கூற வார்த்தைகள் இல்லை, இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் என குறிப்பிட்டுள்ளார். மேலும் காயமடைந்தவர்கள் வேகமாக குணமடைய பிரார்த்தனை செய்வதாக ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளார்.
துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு, இந்த செய்தியை கேட்டு பெரும் துயரமடைந்தேன், தற்போது அவர்களின் குடும்பத்தாருக்கு எனது அனுதாபங்களை தெரிவிக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.