அமராவதி:ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஆந்திரப் பிரதேச அரசு சார்பில் விஜயவாடாவில் இன்று (டிசம்பர் 4) நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் முர்மு பேசுகையில், எனக்கு சிறப்பான வரவேற்பு அளித்த ஆந்திர மாநில அரசுக்கும், மக்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணாறு, வம்சத்ரா, நாகவல்லி போன்ற நதிகளை ஆந்திர மாநிலம் பெற்றுள்ளது.
இந்த நதிகளைப் பாதுகாப்பதுடன், அதன் தூய்மையை உறுதிசெய்ய வேண்டியது அனைவரின் கடமை. பெண்கள் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதில், முன் உதாரணமாகத் திகழும் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த பல பெண்கள், நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். சுதந்திரப் போராட்ட வீராங்கனையான சரோஜி நாயுடுவின் வீரத்தை ஜார்க்கண்ட் ஆளுநராக இருந்த காலங்களில் எப்போதும் நினைவில் கொண்டிருந்தேன்.