தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆபாச பட விவகாரம் : ஷில்பா கணவர் மனு நிராகரிப்பு! - ஷில்பா

ஆபாச படங்கள் தயாரித்த வழக்கில் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவின் ஜாமின் மனு மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

Porn films case
Porn films case

By

Published : Aug 7, 2021, 4:38 PM IST

மும்பை : ஆபாச பட தயாரிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்தாரா அவரின் நிறுவனத்தில் தலைமை ஐடி அலுவலராக பணிபுரியும் ரியான் தோர்போ ஆகியோர் மும்பை உயர் நீதிமன்றத்தில் ஜாமின் கோரி விண்ணப்பித்திருந்தனர்.

இந்த ஜாமின் மனு ஏஎஸ் கட்கரி அடங்கிய ஒற்றை அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை நிராகரித்த நீதிபதி, ராஜ் குந்த்ராவுக்கு ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்துவிட்டார்.

மும்பை உயர் நீதிமன்றம்

ராஜ் குந்த்ரா மீது ஏமாற்றுதல், ஆபாச படங்கள் விளம்பரங்கள் காட்சிப்படுத்துதல் மற்றும் பொதுவான தலையீடுகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தவிர இந்திய தகவல் தொடர்புச் சட்டத்தின் கீழ் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ஷில்பா கணவர் கைதால், கிலி பிடித்த நடிகை!

ABOUT THE AUTHOR

...view details