தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 9, 2022, 1:26 PM IST

Updated : Jun 9, 2022, 1:44 PM IST

ETV Bharat / bharat

காதலன் உடன் பிரச்சனை... மலை உச்சியிலிருந்து தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்..

காதலன் உடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மலை உச்சியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்ணிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி பத்திரமாக போலீசார் மீட்டனர்.

காதலுடன் பிரச்சனை மலை உச்சியிலிருந்து தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்
காதலுடன் பிரச்சனை மலை உச்சியிலிருந்து தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்

கேரளா : இடுக்கி மாவட்டம் குதிரைலாங்குடியில் உள்ள மலை உச்சியிலிருந்து ஒரு பெண் தற்கொலை செய்ய முயன்றதை பார்த்த அப்பகுதி பொது மக்கள் உடனடியாக அடிமாலி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, அங்கு சென்ற எஸ்ஐ சந்தோஷ் தலைமையிலான காவல்துறையினர் அந்த இளம்பெண்ணிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அதில் அந்த பெண் தனது காதலனுடன் பிரச்சனை ஏற்பட்டதால் தற்கொலை செய்து கொள்ள போவதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து, மலை உச்சியிலிருந்த பெண்ணிடம் சுமார் இரண்டு மணிநேரம் எஸ்ஐ பேச்சு வார்த்தை நடத்தினார்.

காதல் உடன் பிரச்சனை மலை உச்சியிலிருந்து தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்.. பேசியே மனதை மாற்றிய போலீசார்...
தற்கொலையை கைவிடுக

என்ன பிரச்சனை என்றாலும் அதனை தான் நிவர்த்தி செய்து தருவதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து அந்த இளம்பெண் தற்கொலை முடிவை மாற்றி மலை உச்சியிலிருந்து இறங்கி வந்தார்.

இதையும் படிங்க: 'பொல்லாத காதல்' : அரசுப்பணி கிடைத்த மனைவிக்கு கணவர் செய்த கொடூரம்!

Last Updated : Jun 9, 2022, 1:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details