தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 2, 2023, 10:37 PM IST

ETV Bharat / bharat

படிப்புக்காக வேலைசெய்த காஷ்மீரி இளைஞர்களின் பொருட்கள் ஆற்றில் வீச்சு; போலீசார் விசாரணை!

உத்தரப்பிரதேசம் அருகே ஹஸ்ரத்கஞ்ச் காவல் நிலையப் பகுதியில் உலர் பழங்களை விற்கும் காஷ்மீரி இளைஞர்களின் பொருட்களை கோமதி ஆற்றில் சிலர் வீசிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காஷ்மீரி இளைஞர்களின் பொருட்கள் ஆற்றில் வீசிய விவகாரம்; போலீசார் விசாரணை!
காஷ்மீரி இளைஞர்களின் பொருட்கள் ஆற்றில் வீசிய விவகாரம்; போலீசார் விசாரணை!

லக்னோ:உத்தரப்பிரதேசதலைநகரில் உலர் பழங்களை விற்கும் காஷ்மீரி இளைஞர்கள், தங்களின் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கோமதி ஆற்றில் வீசப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளனர். அந்த இளைஞர்கள் தங்களை மாநகராட்சி ஊழியர்கள் என்று கூறிக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்குப் பிறகு காஷ்மீர் இளைஞர்கள் தங்களின் வேதனையை வெளிப்படுத்தினர்.

தங்கள்பகுதியில் வந்து சம்பாதிக்க காஷ்மீரில் இருந்து சில இளைஞர்கள் வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது என்றும்; ஆனால், மக்கள் அதைச் செய்ய அனுமதிக்கவில்லை எனவும் தெரிகிறது.

ஆனால், காவல்துறையின் கூற்றுப்படி, ’இந்த விவகாரம் இரண்டு வாடிக்கையாளர்களுக்கு இடையில் இருந்தது. அவர்களில் ஒருவர் இந்த பொருட்களை வீசி எறிந்தார்’ என்றனர்.

காஷ்மீரில் உள்ள குல்காமில் இருந்து வந்த மோமின் கூறுகையில், 'வியாழன் அன்று, நாங்கள் அன்றாடம் போலவே பொருட்களை விற்றுக் கொண்டிருந்தோம். முதலில் போலீசார் வந்து தங்கள் உடைமைகளை அகற்றுமாறு அன்புடன் கேட்டுக் கொண்டனர். சிறிது நேரம் கழித்து, சில இளைஞர்களும், பெண்களும் காரில் வந்து, தங்களை முனிசிபல் கார்ப்பரேஷன் என்று கூறி, தங்கள் பொருட்களை கோமதி ஆற்றில் வீசினர். இதற்கு அங்கிருந்த வழக்கறிஞர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்ததால், காரை விட்டுவிட்டு அவர்கள் தப்பியோடினர்’ என்றார்.

இதைத்தொடர்ந்து, மற்றொரு காஷ்மீரி இளைஞர் ஆதில் கூறுகையில்: ’கடந்த இரண்டு மாதங்களாக தனது பொருட்களை லக்னோவில் ஒருவர் விற்பனை செய்து வருகிறார். காஷ்மீரில் பி.காம் படித்து வரும் அவர், ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலத்தில் உலர் பழங்களை விற்று சம்பாதிக்க வருகிறார். ஆனால் அவரை இப்படி நடத்துவதில்லை’ என்றார்.

லக்னோவில் ஜி 20 மற்றும் முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு நடைபெற உள்ளதாகவும், இதுபோன்ற சூழ்நிலையில் கடை எதுவும் அமைக்க முடியாது என்றும், அதனால் அனைத்து பொருட்களையும் எடுக்க போலீசார் அவர்களிடம் கூறியதாக பாதிக்கப்பட்டவர் கூறினார்.

இதுகுறித்து, ஹஸ்ரத்கஞ்ச் இன்ஸ்பெக்டர் அகிலேஷ் குமார் மிஸ்ரா கூறுகையில்: ’காஷ்மீர் இளைஞர்கள் கோமதி நதிக்கரை அருகே பொருட்களை விற்றுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த வழக்கறிஞர் ஒருவருக்கும், காரில் இருந்த இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, காரில் இருந்த இளைஞர்கள் காஷ்மீர் இளைஞர்களின் பைகளை ஆற்றில் வீசியுள்ளனர். காரை பறிமுதல் செய்து, வீசியவர்களை தேடி வருகிறோம்’ என்றார்.

மறுபுறம், டிசிபி மத்திய அபர்ணா ரஜத் கௌசிக் கூறுகையில்: ’கோமதி நதிக்கரையில் வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்போது, லக்னோ மேம்பாட்டு ஆணையத்தின் ஊழியர்கள், அங்கு உலர் பழங்கள் விற்பனை செய்யும் காஷ்மீரி இளைஞர்களை வெளியேறுமாறு கூறியுள்ளனர். ஆனால் அவர்கள் வெளியேறவில்லை. இதனால் அவர்களை அகற்ற எல்டிஏ ஊழியர்கள் மீண்டும் அங்கு சென்றனர். இதற்கிடையில், ஒரு வழக்கறிஞர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவருடன் சண்டையிட்டார். காய்ந்த பழங்களை ஆற்றில் வீசுவது போல் இதுவரை எந்தப்புகாரும் வரவில்லை' என்றார்.

இதையும் படிங்க:இறந்தும் 4 பேர் கண்களில் வாழும் பொள்ளாச்சி இளம் மருத்துவர்!

ABOUT THE AUTHOR

...view details