பாரதப் பிரதமர் நரேந்திர மோடி 'பரிக்ஷா பே சார்ச்சா' என்ற பெயரில் 2018ஆம் ஆண்டிலிருந்து மாணாக்கர், ஆசிரியர்கள், பெற்றோருடன் கலந்துரையாடிவருகிறார்.
அந்தவகையில், நான்காவது ஆண்டாக இந்தக் கலந்துரையாடல் நிகழவுள்ளது. ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் நடக்கும் இந்த நிகழ்வு கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தாண்டு இன்று (ஏப்ரல் 7) மாலை 7 மணிக்கு நடைபெற உள்ளது.
கடந்தாண்டு இதில் பங்கேற்க நாடு முழுவதும் விண்ணப்பித்த இரண்டரை லட்சம் மாணாக்கரில் இரண்டாயிரம் பேர் வெற்றிபெற்று பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசினர். அதில் 66 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பரிக்ஷா பே சார்ச்சா 2021
இந்தாண்டு நடக்கும் பரிக்ஷா பே சார்ச்சா நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான மாணாக்கர் கலந்துகொண்டு காணொலி வாயிலாக நரேந்திர மோடியுடன் கலந்துரையாட உள்ளதாக மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்தார்.