தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'ஜன் ஔசதி மருந்தகங்கள் ஏழைகளை பாதுகாக்கின்றன' - பிரதமர் மோடி - பிரதமர் நரேந்திர மோடி ஜன் ஔசதி மருந்தகங்கள்

"ஜன் ஔசதி மருந்தகங்கள் மூலம் ஏழை மக்களின் 9,000 கோடி ரூபாய் பணம் சேமிக்கப்பட்டுள்ளது" என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

PM Modi
PM Modi

By

Published : Mar 7, 2021, 4:43 PM IST

நாட்டில் ஜன் ஔசதி தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், அது தொடர்பான கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார். அப்போது, "மருந்துகளின் விலை அதிகமாக இருக்கும் சூழலில் ஏழை மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கில் ஜன் ஔசதி திட்டம் தொடங்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின் மூலம் ஏழைகளுக்கு குறைந்த விலையில் மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் ஏழைகளின் 9,000 கோடி ரூபாய் பணம் சேமிக்கப்பட்டுள்ளது. எனவே பொருளாதார ரீதியாக பின்தங்கிய பலரும் மருந்துகள் பெறத் தொடங்கியுள்ளனர். எனவே, ஜன் ஔசதி மருந்தகங்களை ஏழை, எளியவர்கள் உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்" என்று பிரதமர் தெரிவித்தார்.

நாடு முழுவதும் இதுவரை 7 ஆயிரத்து 500 ஜன் ஔசதி மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான விழிப்புணர்வை கொண்ட வர மார்ச் 1ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஜன் ஔசதி வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன் இறுதி நாளான மார்ச் 7ஆம் தேதி ஜன் ஔசதி தினமாக கொண்டாடப்படுகிறது.

இதையும் படிங்க:'குஜராத்தில் 2 ஆண்டுகளில் 313 சிங்கங்கள் இறந்துள்ளன' - அமைச்சர் தகவல்

ABOUT THE AUTHOR

...view details