டாக்கா: பிரதமர் நரேந்திர மோடி, வங்கதேசத்தின் இரண்டாம் நாள் பயணமான இன்று (மார்ச் 27) ஜெஷோரேஷ்வரி, ஓரகண்டி கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு நடத்துகிறார்.
இதைத்தொடர்ந்து, 51 சக்தி பீடத்தின் கோயில்களில் ஒன்றான ஜெஷோரேஸ்வரி காளி கோயிலில் பூஜை செய்கிறார். அதன்பின்னர், கோபால்கஞ்ச் மாவட்டத்தின் துங்கிபாராவில் உள்ள அந்நாட்டின் 'தேசத்தின் தந்தையின் கல்லறை' பங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மான் நினைவிடத்தையும் பிரதமர் பார்வையிடுவார்.