டெல்லி: தனது மக்களவைத் தொகுதியான வாரணாசிக்கு திங்கள்கிழமை செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, அங்கு பிரயாகராஜ் - வரணாசி நகரத்திற்கு இடையிலான 6 வழி தேசிய நெடுஞ்சாலையைத் திறந்து வைக்கிறார். பின்னர், வாரணாசியில் நடைபெறும் தேவ் தீபாவளி நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கிறார்.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வாரணாசி சென்று காசி விஸ்வநாதர் கோயில் தள திட்டத்தினை பார்வையிடும் பிரதமர், சாரநாத் தொல்பொருள் தளத்திற்கும் செல்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ. 2,447 கோடி செலவில், புதிதாக 73 கி.மீ நீளம் அகலப்படுத்தப்பட்ட ஆறு வழிச்சாலையான தேசிய நெடுஞ்சாலை 19, பிரயாகராஜ் மற்றும் வாரணாசி இடையேயான பயண நேரத்தை ஒரு மணி நேரத்திற்கு குறைக்கும்.