பிரதமர் நரேந்திர மோடி இன்று (டிச. 07) நண்பகல் 12 மணி அளவில் காணொலி காட்சி மூலம் ஆக்ரா மெட்ரோ ரயில் திட்ட கட்டுமான பணிகளைத் தொடங்கிவைக்கவுள்ளார்.
இந்த நிகழ்வில், உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கலந்துகொள்கின்றனர். ஆக்ரா மெட்ரோ ரயில் திட்டத்தின் மொத்த மதிப்பு 8,379.62 கோடி ரூபாயாகும்.