தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பரிக்ஷா பே சர்சா 2022: மாணவர்கள், பெற்றோருடன் நேரடியாக உரையாற்றும் பிரதமர் மோடி - PM Modi to interact with students in Delhi

பிரதமர் நரேந்திர மோடி 'பரிக்ஷா பே சர்ச்சா' நிகழ்ச்சியின் 5ஆம் ஆண்டு பதிப்பில் மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்களுடன் நேரில் உரையாற்றுகிறார்.

pm-modi-to-address-5th-edition-of-pariksha-pe-charcha-today
pm-modi-to-address-5th-edition-of-pariksha-pe-charcha-today

By

Published : Apr 1, 2022, 11:04 AM IST

நாடு முழுவதும் உள்ள 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வுகளால் ஏற்படும் மனஅழுத்தத்தில் இருந்து மீளும் வகையில் மத்திய அரசு, 2018ஆம் ஆண்டில் 'பரிக்‌ஷா பே சார்ச்சா' என்னும் கலந்துரையாடல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. இந்த நிகழ்வுக்காக 9 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு போட்டி தேர்வுகள் நடத்தப்படும்.

அதில் வெற்றி பெறும் மாணவர்கள், அவர்களுடைய பெற்றோர், ஆசிரியர்களுடன் பிரதமர் மோடியுடன் நேரடியாக கலந்துரையாட அனுமதிக்கப்படுவர். இந்த நிகழ்வு நான்கு ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது. அந்த வகையில் இந்தாண்டு டெல்லி டல்கோத்ரா விளையாட்டு அரங்கில், மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று (ஏப்ரல் 1) கலந்துரையாடி வருகிறார்.

முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்த ஆண்டுக்கான பரிக்ஷா பே சர்ச்சா நிகழ்வின் மீதான உற்சாகம் அளப்பரியது. இதில் லட்சக்கணக்கான மக்கள் தங்களது மதிப்புமிக்க அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பங்களிக்கும் மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு எனது நன்றிகள்" எனப் பதிவிட்டிருந்தார்.

இதையும் படிங்க:திடீரென பழுதாகிய ஜிப்லைன்... 1,000 அடி உயரத்தில் சிக்கிய பெண்...

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details