1998-ம் ஆண்டு குஜராத் மாநிலம் பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது. வாஜ்பாய் தலைமையிலான அரசு பதவியேற்ற இரண்டு மாதங்களுக்குள்ளாகவே இந்தச் சோதனை நடத்தப்பட்டது.
இந்தச் சோதனைக்கு உலக நாடுகள் அப்போது கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால், இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் குறியீடாகவே நாட்டு மக்கள் இதனைப் பார்த்தனர்.
இதைத்தொடர்ந்து சோதனை நடத்திய மே 11ஆம் தேதி, தேசிய தொழில்நுட்ப தினமாக அறிவிக்கப்பட்டது. ஆண்டுதோறும் மே 11ஆம் தேதி தேசிய தொழில்நுட்ப தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.