தமிழ்நாடு

tamil nadu

பிரதமர் மோடி மகாசிவராத்திரி வாழ்த்து

By

Published : Mar 1, 2022, 12:26 PM IST

மகாசிவராத்திரியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

காசி விஸ்வநாதர் கோயிலில் பிரதமர் மோடி
காசி விஸ்வநாதர் கோயிலில் பிரதமர் மோடி

டெல்லி:மகாசிவராத்திரி விழா இன்று (மார்ச்.1) நாடு முழுவதும் உள்ள சிவன் கோயில்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பக்தர்கள் கோயில் சென்று வழிபாடு செய்து வருகின்றனர்.

இதையொட்டி பிரதமர் மோடி தனது ட்விட்டரில், "நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மகாசிவராத்திரி வாழ்த்துகள். கடவுள் மகாதேவ் அனைவரையும் ஆசீர்வதிக்கட்டும். ஓம் நம சிவாய" என்று பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடி ட்விட்

முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை (பிப்.27) உத்தரப் பிரதேசம் மாநிலம் சட்டப்பேரவை தேர்தல் பரப்புரைக்கு சென்ற போது, மகாசிவராத்திரி வருவதையொட்டி வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு செய்தார்.

காசி விஸ்வநாதர் கோயிலில் பிரதமர் மோடி

இதையும் படிங்க: உயர்ந்த கொள்கைகளுக்காக ஸ்டாலின் தொடர்ந்து போராட வேண்டும்; கேரள முதலமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details