டெல்லி:நாட்டின் 75வது சுதந்திர தினத்தை குறிக்கும் வகையில் 75 மாவட்டங்களில் 75 டிஜிட்டல் வங்கி அலகுகள் (Digital Banking Units-DBUs) ஏற்படுத்தப்படும் என 2022-23 மத்திய பட்ஜெட் உரையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். அதன்படி, பிரதமர் நரேந்திர மோடி இன்று(அக்.16) டிஜிட்டல் வங்கி அலகுகளை காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். இதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "டிஜிட்டல் வங்கி அலகுகள், மக்களுக்கு சேமிப்புக் கணக்குகளைத் திறப்பு, பாஸ்புக் அச்சிடுதல், நிதி பரிமாற்றம், முதலீடு போன்ற பல்வேறு வங்கி சேவைகளை வழங்கும். இவை வங்கிகளின் திட்டங்கள் மற்றும் சேவைகளை ஆண்டு முழுவதும் குறைந்த செலவில் எளிமையான அணுகுமுறையுடன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும்.