கோவிட்-19 பெருந்தொற்று பாதிப்பு காரணமாக உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாஜக அமைச்சர் விஜய் கஷ்யாப் உயிரிழந்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் பெருந்தொற்று காரணமாக உயிரிழக்கும் மூன்றாவது அமைச்சர் இவர் ஆவார்.
உத்தரப் பிரதேச மாநிலம் சார்தவால் தொகுதி உறுப்பினரான இவர், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவையில் வருவாய்த் துறை அமைச்சராகப் பணியாற்றி வந்தார். இவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.