கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் 2ஆம் தேதி ஆந்திர மாநிலத்திலிருந்து தனி மாநிலமாக தெலங்கானா உருவானது.
'தெலங்கானா கடின உழைப்பாளிகள் நிறைந்த மாநிலம்' - பிரதமர் வாழ்த்து - Telangana
தெலங்கானா மாநில நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அம்மாநில மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
'தெலுங்கானா கடின உழைப்பாளிகள் நிறைந்த மாநிலம்' - பிரதமர் வாழ்த்து
இந்த நிலையில் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, "தெலங்கானா மாநிலம் உருவான தினத்தில் அம்மாநில மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தனித்துவமான கலாச்சாரம், பல துறைகளில் சிறந்து விளங்கும், கடின உழைப்பாளிகள் நிறைந்த மாநிலம். தெலங்கானா மக்களின் ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்வுக்காகவும் பிராத்தனை செய்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'கரோனா படிப்படியாகக் குறைந்து வருகிறது’ - மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்