டெல்லி : டெல்லி-ஹரியானா எல்லை பகுதியான சிங்குவில் வெள்ளிக்கிழமை (அக்.15) 32 வயதான பட்டியலின விவசாய தொழிலாளி அடித்துக் கொல்லப்பட்டார். அவரது இடக்கை மணிக்கட்டு வெட்டப்பட்டு, காவல் தடுப்பு பலகையில் தொங்கவிடப்பட்டிருந்தார்.
இது தொடர்பான காணொலிக் காட்சிகள் வெளியாகி நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. இந்நிலையில் ஸ்வாதி கோயல் மற்றும் சஞ்சிவ் நேவார் ஆகியோர் வழக்குரைஞர் சாசங்க் சேகர் ஜா மூலம் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனுவில், “கோவிட்19 பெருந்தொற்று நெருக்கடிக்கு மத்தியில் விவசாயிகள் போராட்டங்களை நடத்திவருகின்றனர். இதன்மூலம், தங்களின் உயிர்களுக்கு மட்டுமின்றி பொதுமக்களின் பாதுகாப்புக்கும் இடரை ஏற்படுத்திவருகின்றனர்.