தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கிரண்பேடிக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம் நடத்த திட்டம்: விசிகவினர் கைது - tamilnadu latest news

புதுச்சேரி: துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்த திட்டமிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் உட்பட 100க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

100க்கும் மேற்பட்ட விசிகவினர் கைது
100க்கும் மேற்பட்ட விசிகவினர் கைது

By

Published : Jan 26, 2021, 2:34 PM IST

புதுச்சேரியில் குடியரசு தின விழாவில் பங்கேற்கும் துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிர்ப்பு தெரிவித்து, கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்தப்போவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சுவரொட்டிகள் ஒட்டினர்.

இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் பாவாணரை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் போராட்டத்திற்கு பங்கேற்க வந்த 100க்கும் மேற்பட்ட அக்கட்சியினரும் கைது செய்யப்பட்டனர்.

100க்கும் மேற்பட்ட விசிகவினர் கைது

தொடர்ந்து அவர்களிடமிருந்து கருப்பு கொடிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதையும் படிங்க: மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து விசிக போராட்டம்!

ABOUT THE AUTHOR

...view details