லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் எம்பி-எம்எல்ஏக்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் சாவர்க்கர் கருத்துக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்ய காவல் நிலையத்துக்கு உத்தரவிடக் கோரி தேசிய வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் நரேந்திர பாண்டே வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து, லக்னோவின் ஹஸ்ரத்கஞ்ச் காவல் நிலையம் தரப்பில் பதில் மனுவை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணையை டிசம்பர் 8ஆம் தேதி மீண்டும் நடக்கிறது. காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி நவம்பர் 15ஆம் தேதியன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் பாரத் ஜோடோ யாத்திரையில் ஈடுபட்டிருந்தார்.