மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் எட்டு கட்டமாக நடைபெற்றுவருகிறது. முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் நந்திகிராம் தொகுதி உள்ளிட்ட 30 தொகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குபதிவு இன்று(ஏப்.1) நடைபெற்றது.
இந்நிலையில் உலுபெரியா பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். அப்போது அவர், வங்க மக்கள் மம்தா பானர்ஜியை பதவியிலிருந்து இறக்க முடிவு செய்துவிட்டார்கள். நந்திகிராம் மக்கள் இன்று தங்கள் எண்ணத்தை நிறைவேற்றியுள்ளார்கள். எனவே, மம்தா மற்றொரு தொகுதியில் இரண்டாவது முறை வேட்புமனு தாக்கல் செய்வது நல்லது. அங்கு மக்கள் மம்தாவை தோற்கடிப்பார்கள்.