தமிழ்நாடு

tamil nadu

இமாச்சலில் மீண்டும் நிலச்சரிவு - 40 பேர் மரணம் ?

இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 40 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

By

Published : Aug 11, 2021, 2:41 PM IST

Published : Aug 11, 2021, 2:41 PM IST

Himachal Pradesh
Himachal Pradesh

இமாச்சலப் பிரதேசம் கின்னௌரில் இன்று பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் அரசு பேருந்து, சரக்கு வாகனம் சிக்கியுள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பேருந்து கின்னௌரில் இருந்து சிம்லாவுக்கு சென்றதாகக் கூறப்படுகிறது. நிலச்சரிவில் சிக்கிப் புதைந்த பேருந்தையும் சரக்கு வாகனத்தையும் மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு, இந்தோ - திபெத் எல்லைக் காவல்படை, உள்ளூர் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

நிலச்சரிவில் மொத்தம் 200க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாகவும், 150க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாகவும் பேரிடர் மீட்புக்குழு தெரிவித்துள்ளது.

40க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் புதைந்து பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்தாண்டு பருவமழை தொடங்கிய பின்னர் இமாச்சலில் 30க்கும் மேற்பட்ட நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க:காருடன் எரித்துக் கொல்லப்பட்ட பாஜக பிரமுகர்: தெலங்கானாவில் கொடூரம்!

ABOUT THE AUTHOR

...view details