தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக-அதிமுக உடன்பாடு! தேர்தலுக்குப் பின் முதலமைச்சர் தேர்வு!

புதுச்சேரி: வரும் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ்க்கு 16 தொகுதிகளும், பாஜக மற்றும் அதிமுகவிற்கு 14 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.

By

Published : Mar 9, 2021, 5:18 PM IST

pudhucherry
pudhucherry

புதுச்சேரியில் பாஜக அதிமுக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் இணைவது குறித்த பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்த நிலையில், இன்று அக்கூட்டணி உறுதியானது. அதைத்தொடர்ந்து பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, அதிமுக மாநிலச் செயலாளர் அன்பழகன் ஆகியோர் இன்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, “அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி, அதிமுக இணைந்து வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலை சந்திக்கிறது.

மொத்தமுள்ள 30 சட்டமன்ற தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், பாஜக மற்றும் அதிமுக 14 தொகுதிகளிலும் போட்டியிடுவது என ஒப்புக்கொண்டுள்ளோம். எந்தெந்தத் தொகுதிகள் என்பது பின்னர் அறிவிக்கப்படும். தேர்தலுக்குப் பின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி முதலமைச்சரை தேர்வு செய்வார்கள்” என்றனர்.

இச்சந்திப்பின்போது, முதலமைச்சர் வேட்பாளராக ரங்கசாமியை அறிவிக்காததால் அங்கு வந்திருந்த அவரது ஆதரவாளர்கள், ’வருங்கால முதலமைச்சர் ரங்கசாமி’ என முழக்கமிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க:அரசு பேருந்தில் பயணம் செய்த புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை

ABOUT THE AUTHOR

...view details