தமிழ்நாடு

tamil nadu

நோ லாக்டவுன், நோ ஊரடங்கு- எடியூரப்பா!

By

Published : Mar 30, 2021, 11:48 AM IST

பொதுமக்கள் கோவிட் விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும், மாநிலத்தில் பொதுமுடக்கமோ (லாக் டவுன்), இரவு நேர ஊரடங்கோ கொண்டுவரப்படாது என்று முதலமைச்சர் எடியூரப்பா கூறினார்.

No lockdown in Karnataka  night curfew in Karnataka  Karnataka chief minister  BS Yediyurappa on lockdown  Karnataka COVID-19  Bengaluru covid  பொதுமுடக்கம்  ஊரடங்கு  எடியூரப்பா
No lockdown in Karnataka night curfew in Karnataka Karnataka chief minister BS Yediyurappa on lockdown Karnataka COVID-19 Bengaluru covid பொதுமுடக்கம் ஊரடங்கு எடியூரப்பா

பெங்களூரு:மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு, பொதுமுடக்கம் (லாக் டவுன்) அமல்படுத்துவது தொடர்பாக அமைச்சர்கள், சுகாதார அலுவலர்களுடன் முதலமைச்சர் பிஎஸ் எடியூரப்பா ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து முதலமைச்சர் எடியூரப்பா கூறுகையில், “மாநிலத்தில் கோவிட் விதிமுறைகள் கடுமையாக கடைப்பிடிக்கப்படும்.

மக்கள் கோவிட் நெறிமுறைகளுக்கு உள்பட்டு நடக்க வேண்டும். தகுந்த இடைவெளி, முகக்கவசம் அணிய வேண்டும். இல்லையெனில் நிலைமை மிகவும் கடுமையாக மாறிவிடும். எனினும் மாநிலத்தில் பொதுமுடக்கம், லாக் டவுன் உள்ளிட்டவற்றை நடைமுறைப்படுத்தும் எண்ணம் இல்லை” என்றார். பெங்களூருவில் கடந்த ஒரு நாளில் 2,004 பேர் கரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இதுவரை 33 லட்சத்து 83 ஆயிரத்து 872 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பரூக் அப்துல்லாவுக்கு கோவிட் பாதிப்பு

ABOUT THE AUTHOR

...view details