இது குறித்து அவர் தெரிவிக்கையில், "பெட்ரோல் விலை ரூ.100 ஐ தொடும் என்று ஏற்கனவே தெரிவித்திருந்தோம். அதைப்போல் தற்போது நிலை உருவாகியுள்ளது. இன்னும் ஆறு மாதங்களில் பெட்ரோல் ரூ.150, எரிவாயு ரூ.1,250, டீசல் ரூ.140 ஆகிவிடும், ஆகவே மக்கள் மோடி அரசைப் புரிந்துகொள்ள வேண்டும்.
அறிவிப்புகள் நடைமுறைக்கு வராமல் அறிவிப்பாகவே உள்ளது. நிதியை கையில் வைத்திருந்து அறிவித்திருக்க வேண்டும். ஆனால் புதுச்சேரி அரசு தற்போது ஸ்தம்பித்துள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் விதிமுறைகள் வந்துள்ளதால் திட்டங்களை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்ற கருத்து உண்மையில்லை. அறிவித்த திட்டங்களை நடைமுறைப்படுத்த தடை ஏதும் இல்லை. மக்களை மாநில அரசு ஏமாற்றக் கூடாது.