நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு விரைவில் நடைபெறவுள்ளது. பத்தாண்டுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும் என்ற நிலையில், 2021ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு கரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக தாமதமானது.
தற்போது தொற்று பரவல் குறைந்துள்ள நிலையில், கணக்கெடுப்புக்கான ஆயத்த பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளது.
சாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கை
இந்த மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டும் பல்வேறு அரசியல் கட்சிகளும் கோரிக்கை வைத்துள்ளன. 1931ஆம் ஆண்டு சாதிவாரி கணக்கெடுப்பு புள்ளிவிவரத்திற்கு பின் இந்தியாவில், சாதிவாரி புள்ளிவிவரங்கள் எதுவும் அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், இட ஒதுக்கீடு, சமூக நீதி கொள்கைகளை முறையாக நடைமுறைபடுத்த இந்த மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டும் என பாஜகவின் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் கோரிவருகிறது.