தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நான்காம் வகுப்பு மாணவனை மண்வெட்டியால் அடித்து கொன்ற ஆசிரியர்

கர்நாடகாவில் உள்ள அரசுப் பள்ளியில் ஒன்பது வயது சிறுவன் ஆசிரியரால் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

By

Published : Dec 20, 2022, 9:44 AM IST

நான்காம் வகுப்பு மாணவனை மண்வெட்டியால் அடித்து கொன்ற ஆசிரியர்
நான்காம் வகுப்பு மாணவனை மண்வெட்டியால் அடித்து கொன்ற ஆசிரியர்

கடக்:கர்நாடகா மாநிலம் ஹுப்பள்ளியில் உள்ள ஒரு அரசு மாதிரி தொடக்கப் பள்ளியில் நேற்று (டிசம்பர் 19) நான்காம் வகுப்பு படிக்கும் பாரத்(9) எனும் மாணவன் சக மாணவர்களுடன் நின்று பேசிக்கொண்டிருந்த போது, அதே பள்ளியில் பணிபுரியும் கைவுரவ ஆசிரியர் முட்டு ஹடலி என்பவர் மாணவனை மண்வெட்டியால் கடுமையாக தாக்கியுள்ளார்.

இதையடுத்து அந்த சிறுவன் அதே பள்ளியில் ஆசிரியையாக பணிபுரியும் தனது தாய் கீதாவிடம் ஓடியுள்ளார். இருப்பினும் முட்டு ஹடலி கீதாவையும் தாக்கியுள்ளார். அப்போது மாணவனுக்கு ரத்த காயங்கள் ஏற்பட்டன. சக ஆசிரியர்கள் மாணவனை மீட்டு அருகில் உள்ல மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். மாணவனின் தாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ஆசிரியரை தேடி வருகின்றனர். ஆசிரியர் மாணவனை தாக்கியதற்காண காரணம் கண்டறியப்படவில்லை, மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:டியூசன் ஆசிரியரை திருமணம் செய்த மாணவி ; மிரட்டல் விடும் பெற்றோர்

ABOUT THE AUTHOR

...view details