இணைய வழியில் இலவச நீட் பயிற்சி வகுப்புகள்: இன்று முதல் தொடக்கம்!
அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான தமிழ்நாடு அரசின் இலவச நீட் பயற்சி வகுப்புகள் இணைய வழியில் இன்று முதல் தொடங்கவுள்ளன. இந்த பயிற்சி வகுப்புகளில் சேருவதற்கு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதன்படி, 14 ஆயிரத்து 975 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருக்கின்றனர்.
அவர்களுக்கான நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் கடந்த 1ஆம் தேதி முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் மாணவர்கள் அதிகம் பேர் விண்ணப்பித்த காரணத்தினால் அது தள்ளிவைக்கப்பட்டது.
அர்னாப் கோஸ்வாமியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு!
மும்பையில் செயல்பட்டுவரும் ரிபப்ளிக் தொலைக்காட்சியின் அலுவலகம் மற்றும் ஸ்டுடியோ வடிவமைப்பதற்கான ஒப்பந்தம் கான்கார்ட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2018ஆம் ஆண்டு அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அன்வே நாயக், அவரின் தாயார் ஆகியோர் ராய்காட் மாவட்டத்தில் தற்கொலை செய்துகொண்டார்கள்.
அவரின் தற்கொலைக் குறிப்பில், தனது தற்கொலைக்கு காரணம் ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிதான் காரணம் எனப் பெயரை குறிப்பிட்டிருந்ததாக கூறப்படுகிறது. அர்னாப் கோஸ்வாமி தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டார். அவருடன் சேர்த்து ஃபெரோஸ் ஷாயிக், நிதீஷ் சர்தா ஆகியோரும் கைதுசெய்யப்பட்டனர்.