தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

திருமணம் முடிந்த கையோடு சேவையில் இறங்கிய புதுமண தம்பதி - கர்நாடகாவில் பள்ளியை சுத்தம் செய்த புதுமண தம்பதி

கர்நாடகாவைச் சேர்ந்த புதுமண தம்பதி அம்மாநிலத்தைச் சேர்ந்த யுவ ப்ரிகேட் எனும் தொண்டு அமைப்புடன் சேர்ந்து பள்ளி வளாகத்தை தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சேவைகளத்தில் இறங்கிய புதுமண தம்பதி
சேவைகளத்தில் இறங்கிய புதுமண தம்பதி

By

Published : Jan 11, 2021, 3:06 PM IST

பெங்களூரு:கர்நாடகா மாநிலம் தக்ஷின கனடா மாவட்டத்தைச் சேர்ந்த புதுமண தம்பதி, அம்மாவட்டைத்தைச் சேர்ந்த யுவ ப்ரிகேட் என்ற தொண்டு நிறுவனத்துடன் இணைந்து, அம்மாவட்டத்தையடுத்த ரெஞ்ஜிலடி என்னும் கிராமத்திலுள்ள பள்ளி வளாகத்தை சுத்தம் செய்துள்ளனர்.

ஒவ்வொரு வார இறுதியிலும் யுவ ப்ரிகேட் அமைப்பினர் அக்கிராமத்தில் இதுபோன்ற தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், புதுமண தம்பதியினர் இணைந்து நேற்று பள்ளி கழிப்பறையின் சுவற்றுக்கு சுண்ணாம்பு அடிப்பது, தேவையற்ற புற்களை வெட்டுவது போன்ற தூய்மைப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

இதனையடுத்து யுவ ப்ரிகேட் குழுவினரையும், புதுமண தம்பதியினரையும் பாராட்டிய அக்கிராம மக்கள், மகிழ்ச்சியான வாழ்க்கையை தொடர வேண்டும் என புதுமண தம்பதியினரை ஆசிர்வதித்தனர்.

இதையும் படிங்க:நாட்டில் 6 மாதங்களுக்குப் பின் சரிந்த கரோனா தொற்று எண்ணிக்கை

ABOUT THE AUTHOR

...view details