புதுச்சேரியில் கரோனா பரவலை தடுக்கும் விதமாக புத்தாண்டு கொண்டாட்டம் வழக்கமாக நடைபெறும் கடற்கரை சாலையில் நடத்தாமல் மாற்றி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து காவல்த் துறை தலைவருடன் ஆலோசித்து பின்னர் பொது மக்களுக்கு தெரிவிக்கப்படும் என துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
கரோனா நிலவரம் குறித்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தினமும் சுகாதார துறை அலுவலர்களுடன் காணொலியில் கலந்துரையாடி வருகிறார். நேற்று அவரது ஆலோசனையின் போது, "புதுச்சேரியில் கரோனா தொற்று குறைந்து வரும் சூழலில் கரோனா தடுப்பூசிகளின் செயல்பாட்டு வழிகாட்டுதல்களைச் செயல்படுத்தத் தயாராகுமாறு" அறிவுறுத்தினார்.