ஜோத்பூர்:ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதிகள் பதவிக்கு 9 பேர் அறிவிக்கப்பட்டனர். இந்நிலையில் தலைமை நீதிபதி பங்கஜ் மிட்டல் தலைமையில் தம்பதி நீதிபதி உள்பட புதிதாக 9 நீதிபதிகள் பதவியேற்றுக் கொண்டனர். புதிதாக பதவியேற்றுக் கொண்ட நீதிபதிகளில் நுபுர் பாட்டி, புஸ்பேந்திர சிங் பாட்டி ஆகியோர் தம்பதியினர் ஆவர்.
ஏற்கனவே ராஜஸ்தான் நீதிமன்றத்தில் மகேந்திர கோயல் மற்றும் சுபா மேத்தா என்ற தம்பதி நீதிபதிகளாக உள்ளனர். தற்போது மேலும் ஒரு தம்பதி நீதிபதிகளாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதன் மூலம் நாட்டிலேயே இரு தம்பதி நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்றம் என்ற தனிச் சிறப்பை ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் பெற்றது.