தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஷாருக்கானின் மகன் வழக்கில் விசாரணை நடத்திய சமீர் வான்கடேவிற்கு சென்னைக்கு மாற்றம்! - ஷாருக்கானின் மகன் வழக்கில் ரெய்டு நடத்திய சமீர் வான்கடேவிற்கு பணியிடை மாற்றம்

ஆர்யன் கான் மீதான போதைப்பொருள் வழக்கில் விசாரணை நடத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடே சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஷாருக்கானின் மகன் வழக்கில் ரெய்டு நடத்திய சமீர் வான்கடேவிற்கு பணியிடை மாற்றம்!
ஷாருக்கானின் மகன் வழக்கில் ரெய்டு நடத்திய சமீர் வான்கடேவிற்கு பணியிடை மாற்றம்!

By

Published : May 31, 2022, 6:42 AM IST

Updated : May 31, 2022, 9:32 AM IST

டெல்லி:கடந்த ஆண்டு சர்ச்சைக்குரிய போதைப்பொருள் கடத்தல் வழக்கில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆர்யன் உட்பட பலரை என்சிபி கைது செய்தது. அப்போது மும்பையில் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் தலைவராக இருந்த சமீர் வான்கடே சென்னையில் உள்ள இயக்குனரகத்திற்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சமீபத்தில் ஆர்யன்கான் மீதான போதைப்பொருள் கடத்தல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த போதைப்பொருள் தடுப்பு பிரிவு, ஆர்யன் கானுக்கு க்ளீன் சிட் வழங்கியது. வான்கடே தலைமையிலான விசாரணையில் தெளிவான ஆதாரங்கள் ஏதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை என கூறப்பட்டது.

NCB (போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம்)யில் சமீர் வான்கடே பதவிக்காலம் முடிந்ததும், 2008-ம் ஆண்டு மும்பையில் உள்ள வருவாய் புலனாய்வு இயக்குனரகத்திற்கு (டிஆர்ஐ) இந்த ஆண்டு தொடக்கத்தில் மாற்றப்பட்டார். தற்போது அவர் சென்னைக்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் போதைப்பொருள் வழக்கின் இவர் விசாரணை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:போதைப்பொருள் வழக்கு: ஆர்யன் கான் நிரபராதி

Last Updated : May 31, 2022, 9:32 AM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details