புல்வாமா பயங்கரவாத தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி அன்று மத்திய ரிசர்வ் படை வீரர்களின் கான்வாய் மீது மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
இந்த கோர நிகழ்வின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் என்பதால் பல்வேறு தலைவர்கள் தங்கள் அஞ்சலியை செலுத்தி வருகின்றனர். பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா அவருடைய ட்விட்டர் பக்கத்தில், இந்தியாவின் வீர புதல்வர்களுக்கு எனது மரியாதை. அவர்களுக்கு தேசம் என்று நன்றிக்கடன் பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.