தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 5, 2022, 8:34 PM IST

ETV Bharat / bharat

ஓராண்டில் 833 கிலோ தங்க கடத்தல் தடுப்பு - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

கடந்த 2021 - 22ஆம் காலாண்டில் மட்டும் 405 கோடி ரூபாய் மதிப்புள்ள 833 கிலோ தங்கக் கடத்தலை வருவாய் புலானாய்வு இயக்குநரகம் முறியடித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

டெல்லி: வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் 65-வது நிறுவன நாள் விழாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார். 2021-22ஆம் ஆண்டிற்கான மத்திய வருவாய் புலனாய்வு அமைப்பின் கடத்தல் தடுப்பு அறிக்கையை நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், கடந்த 2021-22ஆம் ஆண்டில் 405 கோடி ரூபாய் மதிப்பிலான 833 கிலோ கடத்தல் தங்கம் கைப்பற்றப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். ஆண்டுக்கு சராசரியாக 800 கிலோ தங்கம் கடத்தப்படுவதாகவும், கடத்தல்கள் அபாயகரமான அளவில் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார்.

வணிக மோசடி, சர்வதேச அமலாக்க நடவடிக்கை மற்றும் கரோனாவுக்குப் பிந்தைய பயணக் கட்டுப்பாடு தளர்வுகளால் அதிகரித்து வரும் கடத்தல் குறித்து அறிக்கையை நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். கடந்த 2020-21 மற்றும் 2021-22 காலகட்டத்தில் மட்டும் மியான்மர் பிராந்தியத்தில் இருந்து மட்டும் 37 சதவீதம் என்ற உச்சபட்ச அளவில் தங்க கடத்தல் நடந்திருப்பதாகக் கூறினார்.

அதேபோல், போதைப்பொருள் கடத்தலில் நாட்டில் கொக்கைன் அதிகளவில் கடத்தப்படுவதாகவும், கடந்த 2021-22ஆம் ஆண்டில் மட்டும் 310 கிலோ கடத்தல் கொக்கைன் கைப்பற்றப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

அதே காலகட்டத்தில் 27 மெட்ரிக் டன் கஞ்சாவை வருவாய் புலனாய்வு அமைச்சகம் கைப்பற்றி இருப்பதாகவும் அதிகபட்சமாக உத்தரப்பிரதேசம், திரிபுரா, மத்தியப்பிரதேச மாநிலங்களில் கடத்தல் கஞ்சா கைப்பற்றப்பட்டதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

இதையும் படிங்க:உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முதல் பெண் "சோப்தார்" நியமனம்!

ABOUT THE AUTHOR

...view details