தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 5, 2022, 11:18 AM IST

ETV Bharat / bharat

காஷ்மீரில் களைகட்டிய ஆட்டிறைச்சி விற்பனை!-ஈகை பெருநாளன்று ரூ100 கோடி வசூல்

காஷ்மீரில் ரமலான பண்டிகையன்று மொத்தம் ரூ100 கோடிக்கு மாட்டிறைச்சி விற்பனை ஆகியுள்ளது தெரியவந்துள்ளது.

காஷ்மீரில் களைகட்டிய  ஆட்டிறைச்சி விற்பனை!- ஈகை பெருநாளன்று ரூ100 கோடி வசூல்
காஷ்மீரில் களைகட்டிய ஆட்டிறைச்சி விற்பனை!- ஈகை பெருநாளன்று ரூ100 கோடி வசூல்

காஷ்மீர்:காஷ்மீரில் வாழும் மக்கள் பொதுவாக அவர்களது மதங்களை பொருட்படுத்தாமல் இறைச்சி உணவை உண்பது வழக்கம். இந்நிலையில் ரம்ஜான் பண்டிகையன்று காஷ்மீரில் உள்ள மட்டன் கடைகளில் ஒட்டுமொத்தமாக ரூ100 கோடிக்கு மட்டன் விற்பனையாகியுள்ளது. முந்தைய ஆண்டுகளை காட்டிலும் இந்த ஆண்டு அதிக அளவில் மட்டன் விற்பனையாகியுள்ளதாக காஷ்மீர் விற்பனையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

காஷ்மீர் மாநிலத்தின் மட்டன் விற்பனையாளர் சங்க செயலாளர் மன்சூர் அகமத் குவானன் கூறுகையில் "கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சந்தைகளில் இறைச்சிக்கான தேவை குறைவாக இருந்தது, ஆனால் ரமலான் அன்று சுமார் ரூ100 கோடி மதிப்புள்ள இறைச்சி விற்கப்பட்டது" என்று கூறினார்.

ஆட்டிறைச்சி வியாபாரிகளின் புள்ளிவிவரங்களின்படி, ரமலானுக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக, டெல்லி, ராஜஸ்தான் மற்றும் நாட்டின் பிற சந்தைகளில் இருந்து சுமார் 97,000 வெவ்வேறு செம்மறி ஆடுகள் இறக்குமதி செய்யப்பட்டன. காஷ்மீர் ஆட்டிறைச்சி சந்தைக்கு பெரும்பாலான ஆடு விநியோகம் டெல்லி மற்றும் ராஜஸ்தான் சந்தைகளில் இருந்து வருகிறது. காஷ்மீர் மக்கள் ஆட்டு இறைச்சியை விரும்பி உண்கின்றனர்.

ஈத் பண்டிகையை முன்னிட்டு 650 லாரிகளில் ஆடுகள் காஷ்மீருக்கு கொண்டு வரப்பட்டது. ஆட்டிறைச்சி விற்பனை தவிர, பேக்கரி மற்றும் மிட்டாய் பொருட்களின் பயன்பாடும் காஷ்மீரில் உயர்ந்துள்ளது. காஷ்மீர் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ரூ.20 கோடி மதிப்பிலான பேக்கரி மற்றும் மிட்டாய்கள் விற்பனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க:Exclusive: 18 டன் தங்கம் விற்பனை- உண்மையா..? புரளியா..?

ABOUT THE AUTHOR

...view details