பாலமு: ஜார்க்கண்ட் மாநிலம் பாலமு மாவட்டத்தில் தனுகி என்ற நபர் பேய் ஓட்டும் பணியை செய்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனுகிக்கும் அவரது மகன் பல்ராமுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதற்குப் பிறகு, பல்ராமின் இளைய மகன் திடீரென இறந்துவிட்டார். மகன் இறப்புக்கு தந்தை தனுகிதான் காரணம் என பல்ராம் நினைத்ததாக தெரிகிறது.
இதையடுத்து தனுகி வெளியே சென்று கொண்டிருந்தபோது, பல்ராமும் அவரது மனைவியும் அவரைப் பின்தொடர்ந்து சென்றுள்ளனர். பின்னர் ஆள் இல்லாத இடத்தில் வைத்து தனுகியை தாக்கியுள்ளனர். பிறகு இருவரும் தலைமறைவாகிவிட்டனர். பலத்த காயமடைந்த தனுகியை அப்பகுதி மக்கள் மருத்துவமனையில் சேர்த்ததாக தெரிகிறது. ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டார்.