மும்பை: கரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலைக்கு மத்தியில், மும்பையில் உள்ள ஒரு பள்ளி ஆசிரியர், கரோனா நோயாளிகளை மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு ஆட்டோ மூலம் அழைத்துச் சென்று உதவிவருகிறார்.
ஆசிரியர் தத்தாத்ரேயா சாவந்த் தானாகவே ஆட்டோவை ஓட்டுகிறார், மேலும் கரோனா நோயாளிகளுக்கு இலவச சவாரி அளிக்கிறார், அதே நேரத்தில் பிபிஇ கிட் அணிவது, சுத்திகரிப்பு, பிற அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துக்கொள்கிறார்.
காட்கோபர் பகுதியில் வசிக்கும் சாவந்த், தியன்சாகர் வித்யா மந்திர் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக உள்ளார்.
மாநிலம் முழுவதும் அதிகரித்துவரும் கரோனா நோயாளிகளைக் கருத்தில்கொண்டு, சாவந்த் கடந்த சில நாள்களாக வடகிழக்கு மும்பையில் இந்தச் சேவையை வழங்கிவருகிறார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "நான் கரோனா நோயாளிகளை கோவிட் பராமரிப்பு மையம், மருத்துவமனையில் இலவசமாக இறக்கிவிடுகிறேன்.
மேலும் மருத்துவமனை, கோவிட் மையத்திலிருந்து வெளியேறும் நோயாளிகளை அவர்களின் வீடுகளுக்கு அழைத்துச் செல்கிறேன்" என்று கூறினார்.