தமிழ்நாடு

tamil nadu

மும்பை ஷாலிமார் விரைவு ரயிலின் பார்சல் வேனில் தீ விபத்து

By

Published : Nov 5, 2022, 6:53 PM IST

மகாராஷ்டிராவில் ஷாலிமார் எக்ஸ்பிரஸ் ரயிலின் பார்சல் வேனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

மும்பை ஷாலிமார் விரைவு ரயிலின் பார்சல் வேனில் தீ விபத்து!
மும்பை ஷாலிமார் விரைவு ரயிலின் பார்சல் வேனில் தீ விபத்து!

மும்பை:மகாராஷ்டிராவில் ஷாலிமார் எக்ஸ்பிரஸ் ரயிலின் பார்சல் வேனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் பல்வேறு ரயில் சேவைகள் தடைபட்டன. காலை 8.43 மணியளவில், ஷாலிமார் எக்ஸ்பிரஸ் லோக்மான்ய திலக் டெர்மினஸ் இடையே சென்றுகொண்டிருந்த போது பார்சல் வேனில் தீ விபத்து ஏற்பட்டது.

உடனடியாக உள்ளூர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள், ரயில்வே ஊழியர்கள் தீயை அணைக்கும் கருவிகள் மூலம் தீயை அணைக்க முயன்றனர். காலை 9.30 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மேல்நிலை கம்பியில் மின்சாரம் நிறுத்தப்பட்டது.

இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து மத்திய ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி சிவாஜி சுதார் கூறுகையில், ரயிலில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை. இந்த ரயில் 11.57 மணியளவில் மீண்டும் சேவையை தொடங்கியது எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:மாமன்னர் ராஜராஜ சோழன் எந்த சாதி? வைரலாகும் போஸ்டர்கள்!

ABOUT THE AUTHOR

...view details