ஜாம்நகர்:மாஸ்கோவில் இருந்து கோவாவிற்கு தனியார் சார்டர் விமானம் சென்றுள்ளது. கோவா விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் நிலையத்தை தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
துரிதமாக செயல்பட்ட விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள், சார்டர் விமானம், மற்றும் குஜராத், ஜாம்நகர் விமான நிலையத்திற்குத் தகவல் அளித்தனர். தொடர்ந்து ஜாம்நகர் விமான நிலையத்தில் பிரத்யேக பகுதியில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.