டெல்லி:இதுகுறித்து மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இந்தியாவின் 76ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, இல்லந்தோறும் மூவண்ணக்கொடியை ஏற்றும் பிரச்சாரத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்திருந்தார். இந்த பிரச்சாரம் நாட்டு மக்களிடையே தேசப்பற்றை வலுப்படுத்தும் நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்டது.
இதில் கோடிக்கணக்கான மக்கள் பங்கேற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. அந்த வகையில் மகத்தான சாதனையாக இல்லந்தோறும் மூவண்ணக்கொடி வலைதளத்தில் 6 கோடிக்கும் மேற்பட்ட மூவண்ணக்கொடி செல்ஃபி படங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. இதில் திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்களும் அடங்கும்.