தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிரதமர் மோடி செப்டம்பர் 17ஆம் தேதி மத்தியப் பிரதேம் பயணம் - குனோ தேசிய பூங்காவில் சிவிங்கிப்புலி

பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 17ஆம் தேதி மத்தியப் பிரதேசத்தில் பயணம் மேற்கொள்கிறார். அங்குள்ள குனோ தேசிய பூங்காவில் 8 சிவிங்கிப்புலிகளை விடுக்க உள்ளார்.

பிரதமர் மோடி செப்டம்பர் 17ஆம் தேதி மத்தியப் பிரதேசத்திற்கு பயணம்
பிரதமர் மோடி செப்டம்பர் 17ஆம் தேதி மத்தியப் பிரதேசத்திற்கு பயணம்

By

Published : Sep 15, 2022, 8:51 PM IST

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 17ஆம் தேதி மத்தியப் பிரதேச மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அன்று காலை 10.45 மணி அளவில், குனோ தேசிய பூங்காவில் 8 சிவிங்கிப்புலிகளை விடுவிக்கிறார். அதன் பின் பிற்பகல் 2.30 மணியளவில் ஷியோபூரில் நடக்கும் மகளிர் சுயஉதவிக் குழு மாநாட்டில் பங்கேற்கிறார்.

இந்தியாவில் சிவிங்கிப்புலிகள் அழிந்துவிட்டதாக 1952ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. தற்போது விடுவிக்கப்படும் சிவிங்கிப்புலிகள் ஆப்பிரிக்காவின் நமீபியாவிலிருந்து கொண்டுவரப்பட்டவை. இதற்காக இந்தாண்டு தொடக்கத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. உலகிலேயே முதல் முறையாக கண்டங்களுக்கு இடையே மாமிச உண்ணியான விலங்கு மாற்று இடங்களுக்கு கொண்டுவரப்படுகிறது.

இந்தியாவுக்கு மீண்டும் சிவிங்கிப்புலிகளை கொண்டுவந்திருப்பது வனம் மற்றும் புல்வெளி சூழலை மீட்டமைக்க உதவும். இது பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாக்க உதவுவதுடன் தண்ணீர் பாதுகாப்பு, கரியமில வாயு சமநிலைப்படுத்தல், மண்ணின் ஈரப்பதத்தைப் பாதுகாத்தல், ஒட்டுமொத்தமாக சமூகத்திற்கு பயனளித்தல் போன்ற சூழல் சேவைகளை விரிவுப்படுத்தும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மகளிர் சுயஉதவிக் குழு மாநாடு:மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூரின் கரஹாலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சுயஉதவிக் குழுக்கள் மாநாட்டில் பிரதமர் மோடி பிற்பகலில் பங்கேற்க உள்ளார். இந்த மாநாட்டில் ஆயிரக்கணக்கான மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர். அப்போது நலிவடைந்த பழங்குடியினர் வகுப்புகளில் குறிப்பிட்ட 4 பிரிவினருக்கு திறன்மேம்பாட்டு மையங்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

சுய உதவிக் குழுக்களுக்குள் உள்ள கிராமப்புற ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை அதிகரிக்கவும், வருவாயை கூடுதலாக்கவும், தரமான வாழ்க்கையை அளிக்கவும் நீண்டகால உதவியைச் செய்வது தீன்தயாள் அந்த்யோதயா திட்டம் மற்றும் தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் நோக்கமாகும். குடும்ப வன்முறை, மகளிர் கல்வி, இதர பாலினம் சார்ந்த விஷயங்கள், ஊட்டச்சத்து, துப்புரவு, சுகாதாரம் போன்ற விஷயங்களில் மாற்றத்தை கொண்டுவருவதன் மூலம், மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களுக்கு அதிகாரம் அளித்தலை நோக்கி பணியாற்றுவதும், இந்த இயக்கத்தின் நோக்கமாகும்.

இதையும் படிங்க:சிவிங்கப்புலிகளை கொண்டு வரும் ஜம்மோ ஜெட் விமானம் நமீபியா சென்றது!

ABOUT THE AUTHOR

...view details