பெங்களூரு:கர்நாடகா மாநிலம் ஹாசனில் நேற்று (டிசம்பர் 26) கூரியர் கடையில் மிக்ஸி வெடித்து சிதறியதில் கடை உரிமையாளர் சசி பலத்த காயமடைந்தார். இந்த சம்பவம் கே.ஆர்.புரம் நகரில் உள்ள தனியார் கூரியர் அலுவலகத்தில் இரவு 7:30 மணியளிவில் நடந்துள்ளது. இதுகுறித்து ஹாசன் போலீசார் தரப்பில், இந்த விபத்தில் காயமடைந்த உரிமையாளர் சசிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். உயிருக்கு ஆபத்தில்லை.
கூரியர் கடையில் மிக்ஸி வெடிப்பு.. கர்நாடகாவில் மீண்டும் பதற்றம்.. - ஹாசன் மிக்சி வெடிப்பு
கர்நாடகா மாநிலத்தில் கூரியர் கடையில் மிக்ஸி வெடித்து சிதறியதில் உரிமையாளர் பலத்த காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![கூரியர் கடையில் மிக்ஸி வெடிப்பு.. கர்நாடகாவில் மீண்டும் பதற்றம்.. Mixi blast in Courier shop at Hassan](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-17319998-thumbnail-3x2-l.jpg)
இந்த சம்பவயிடத்தில் தடயவியல் வல்லுநர் குழு ஆதாரங்களை சேகரித்துவருகிறது. வெடித்து சிதறிய மிக்ஸி கடந்த வாரம் கூரியர் அலுவலகத்துக்கு வந்துள்ளது. அதனை வாங்கிச்சென்றவர் 2 நாளுக்கு பின் அது சரியான முகவரியில் இருந்து வரவில்லை என்று கூறி மிக்ஸியை திருப்பிக் கொடுத்துவிட்டு சென்றுள்ளார். இந்த நிலையில், வெடித்து சிதறியுள்ளது. இந்த மிக்ஸி அனுப்பப்பட்ட முகவரி, பெறப்பட்ட முகவரியை வைத்து விசாரணையை தொடங்கியுள்ளோம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க:சென்னையில் மேலும் ஒரு போலி என்ஐஏ அதிகாரி கைது