தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சாலையில் கிடந்த கையெறி குண்டை எடுத்த சிறுவன் உயிரிழப்பு - Assam's Tinsukia blast

திஸ்பூர்: கையெறி குண்டு வெடித்ததில் 12 வயது சிறுவன் உயிரிழந்தார்.

grenade blast at Jagun in Tinisukia district of Assam
grenade blast at Jagun in Tinisukia district of Assam

By

Published : May 11, 2021, 7:33 PM IST

கிழக்கு அசாமில் உள்ள தின்சுகியா மாவட்டம் ஜாகனில் உள்ள கதகதானி பகுதியில் சுஜாய் ஹஜோங் (12) என்ற சிறுவன் சைக்கிள் ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது, சாலையில் வித்தியாசமான பொருள் ஒன்று கிடந்ததைக் கண்டு ஈர்க்கப்பட்டு அதன் அருகே சென்றுள்ளார். இந்நிலையில், எதிர்பாராத விதமாக அப்பொருள் வெடித்ததில் படுகாயமடைந்த சிறுவன், உயிருக்குப் போராடிய நிலையில் சாலையில் கிடந்துள்ளார்.

தொடர்ந்து, தகலறிந்து அவரை மீட்டக் காவல் துறையினர், அச்சிறுவனை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பேசிய காவல் துறை அலுவலர், ”சாலையில் கிடந்த கையெறி குண்டை எடுக்க சிறுவன் முயற்சித்துள்ளான். அப்போது அக்குண்டு வெடித்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்றார்.

இதையும் படிங்க: கண்ணாடியை கழற்றி உண்மையை பாருங்கள் - மோடிக்கு ராகுல் அறிவுறுத்தல்

ABOUT THE AUTHOR

...view details